பரபரப்பான சூழலை ஏற்படுத்திய "நீட் தேர்வு" முடிவுகள் இன்று வெளியீடு

மருத்துவத்திற்கான நீட் தேர்வினை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், மருத்துவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, இதனால் ஏழை, எழிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் அவசரம் சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே மொத்தம் 65,000 எம்பிபிஎஸ் இடங்களுக்காகவும், 23,000 பிடிஎஸ் இடங்களுக்காகவும் தேர்வில் கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 88 அயிரம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். 

இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 8ம் தேதியன்று வெளியிடப்படவிருந்த நிலையில், பிறமொழிகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களில் பாரபட்சம் இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தார்.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கினர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை சிபிஎஸ்இ வாரியமே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் வரும் 26-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இன்று நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 

"cbseneet.nic.in" என்ற இணையதளத்தில் மாணவர்கள் நீட் தேர்விற்கான முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...